வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகள் தூர்வாரும் பணி தீவிரம்!

கோவை: வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுத்தோட்டம் ஆற்றை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் முடுக்கிவிட்டுள்ளார்.

கோவை: வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுத்தோட்டம் ஆற்றை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் முடுக்கிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரை சுற்றி புதுத்தோட்டம் ஆறு மற்றும் நடுமலை ஆறு என இரண்டு ஆறுகள் உள்ளன. இந்த இரண்டு ஆறுகளும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. பருவமழை காலங்களில் இந்த ஆறுகளுக்கு வரும் மழைநீர் கரை புரண்டோடும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், கக்கன் காலணி, சிறுவர் பூங்கா, டோபி காலணி பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.



மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்து போக்குவரத்து சேவை பல நாட்கள் முற்றிலும் முடங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னரே புதுத்தோட்டம் ஆற்றை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் முடுக்கி விட்டுள்ளார்.



இதன்படி கக்கன் காலணியிலிருந்து ஸ்டான்மோர் எஸ்டேட் வரை ஆற்றில் உள்ள அடைப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு கரை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இதே போல், நடுமலை ஆற்றிலும் பணிகள் நடை பெறுகின்றன. மேலும் நகர் பகுதியிலுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...