பாலக்காட்டில் இருந்து கோவை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை: பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பி.ஆர்.நடராஜன் எம்.பி கலந்துக்கொண்டு பேசினார்.



தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுகையில், பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கஸ்தூரிபாளையம் சாலைப்பகுதியில் சாக்கடை கட்டுவதற்கும், சாலையை புதுப்பிக்கவும் சேலம் ரயில்வே துறையிடம் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட ரயில் நிலையம் பகுதிகளில் குடிநீர், கழிப்பிட வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர பேசியுள்ளதாக தெரிவித்தார்.

பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றவர், மங்களூர் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்பதை உடனடியாக அமலில் கொண்டு வரவேண்டும் என்றார்.

அதேபோல, உருமாண்டம்பாளையம் மற்றும் வீரபாண்டி பிரிவு ரயில்வே நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் எனவும் என்.ஜி.ஜி.ஓ காலனியில் இருந்து வட்டமலைபாளையம் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே கேட்டிற்கு புதிய பாலம் அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த பகுதியில் கையெழுத்து இயக்கத்தை கட்சி சார்பில் நடத்தவுள்ளதாக கூறினார்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கேசவமணி உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...