நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் கருஞ்சிறுத்தை இறந்த கிடந்த நிலையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் கருஞ்சிறுத்தை இறந்த கிடந்த நிலையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரியில் காட்டை இழந்த வனவிலங்குகள் வனத்தையொட்டிய தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளன. உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்கும் விலங்குகள் பல்வேறு நேரங்களில் குடியிருப்புகளையொட்டிய பகுதிகளிலேயே உலா வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது.
பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளோம். நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கருஞ்சிறுத்தையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரியவரும்" என்றனர்.
மேலும், சமீப காலமாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மர்மமான முறையில் இறக்கின்றன முறையான விசாரணை மேற்கொண்டு இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

நீலகிரியில் காட்டை இழந்த வனவிலங்குகள் வனத்தையொட்டிய தேயிலைத் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளன. உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்கும் விலங்குகள் பல்வேறு நேரங்களில் குடியிருப்புகளையொட்டிய பகுதிகளிலேயே உலா வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது.
பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளோம். நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கருஞ்சிறுத்தையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரியவரும்" என்றனர்.
மேலும், சமீப காலமாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மர்மமான முறையில் இறக்கின்றன முறையான விசாரணை மேற்கொண்டு இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.