மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

நீலகிரி: நீலகிரியில் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளை குறிவைத்துத் தாக்கும் கரடியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளை குறிவைத்துத் தாக்கும் கரடியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி வரும் கரடி மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் பேபி என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்து வெளியே இருக்கக்கூடிய பொருட்களை சேதம் செய்து விட்டுச் சென்றது. மேலும் அருகே உள்ள வீட்டின் இரும்பு கதவுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.



இதே போன்று மஞ்சூர் கெட்டாரகண்டி பகுதியில் உள்ள பாலு என்பவரின் பட்டறையை பின்புறமாக தகரங்கள் பெயர்த்து உட்புகுந்து, அங்கே இருக்கக்கூடிய எண்ணெய்களை குடித்தும், பொருட்களை சிதறடித்தும் சென்றுள்ளது. தினந்தோறும் கரடியின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...