கோவை: கோவையிலிருந்து மோட்டார் உதிரி பாகங்களை கேரளாவிற்கு கார் மூலம் கொண்டு சென்றபோது தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையிலிருந்து மோட்டார் உதிரி பாகங்களை கேரளாவிற்கு கார் மூலம் கொண்டு சென்றபோது தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையிலிருந்து கேரளாவிற்கு பாலக்காடு சாலை வழியாக பல்வேறு பண்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவையிலிருந்து மோட்டார் உதிரிப் பாகங்கள், தங்க நகைகள், என பல விலைமதிப்பு உள்ள பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் மர்ம கும்பல்கள் பாலக்காடு சாலை, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகளை பயன்படுத்தி காரை வழிமறித்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி கல்யாண் ஜூவல்லரியின் 350 சவரன் தங்க நகைகள் அதிரடியாக வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே மர்ம கும்பல்களால் பல்வேறு வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்கள் காருடன் மர்ம கும்பலால் அதிரடியாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (45). இவர் மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் உதிரி பாகங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு கேரளாவை நோக்கி சென்றுள்ளார். அப்போது, தமிழக கேரளா எல்லையான வாளையார் அருகே வந்த போது, 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த சந்திரன் மற்றும் ஓட்டுநர் லோகநாதனை தாக்கி விட்டு காருடன் மோட்டார் உதிரி பாகங்களை திருடி சென்றனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டி.எஸ்.பி. வேல்முருகன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு பாலக்காடு சாலை வழியாக பல்வேறு பண்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல, கோவையிலிருந்து மோட்டார் உதிரிப் பாகங்கள், தங்க நகைகள், என பல விலைமதிப்பு உள்ள பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் மர்ம கும்பல்கள் பாலக்காடு சாலை, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகளை பயன்படுத்தி காரை வழிமறித்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி கல்யாண் ஜூவல்லரியின் 350 சவரன் தங்க நகைகள் அதிரடியாக வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே மர்ம கும்பல்களால் பல்வேறு வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் உதிரிபாகங்கள் காருடன் மர்ம கும்பலால் அதிரடியாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (45). இவர் மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் உதிரி பாகங்களை தனது காரில் எடுத்துக்கொண்டு கேரளாவை நோக்கி சென்றுள்ளார். அப்போது, தமிழக கேரளா எல்லையான வாளையார் அருகே வந்த போது, 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த சந்திரன் மற்றும் ஓட்டுநர் லோகநாதனை தாக்கி விட்டு காருடன் மோட்டார் உதிரி பாகங்களை திருடி சென்றனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டி.எஸ்.பி. வேல்முருகன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.