வால்பாறையில் கடும் பனிப்பொழிவு காரணமாக கருகி வரும் தேயிலை செடிகள்..! விவசாயிகள் வேதனை

கோவை: வால்பாறையில் பனியின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில், கொசுவினால் தேயிலை செடிகள் பாதிப்படைவது தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கோவை: வால்பாறையில் பனியின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில், கொசுவினால் தேயிலை செடிகள் பாதிப்படைவது தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களோடு வடமாநில தொழிலாளர்களும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.



இந்நிலையில், பனியின் காரணமாக பல இடங்களில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. வால்பாறையிலுள்ள பல தேயிலை தோட்டங்களில் மர்ம கொசு தேயிலைச்செடிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேயிலை செடிகளின் இலைகள் சுருங்குவதுடன் செடிகளும் அழிந்து வருகின்றன. தேயிலை செடியின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொசுவினால் தேயிலை செடிகள் பாதிப்படைவது தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.



இதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. கொசுவினால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை செடிகள் அருகில் கலர் சேலைகளை கட்டி கொசுவை ஈர்த்து அழிக்கும் முயற்சி பரீட்சார்த்தமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் சிவப்பு கொடி மூலம் குறிப்பிடப்பட்டு கொசுவை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...