கோவையில் பெண் போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட குடிமகன்கள் இருவர் கைது!

கோவை: கோவையில் பெண் போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் பெண் போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் மகேந்திரன் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே காவல் நிலையத்தின் உள்ளே நேற்று மாலை பணியிலிருந்த மகேந்திரன் வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.

அப்போது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்..மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வாலிபரை கண்டித்த காவலர்கள் அந்த வாலிபரை வெளியே அனுப்ப முற்பட்டனர்.

மேலும், தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தமான் தீவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார் (34) என்பதும் தற்போது ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. காந்திபுரத்தில் அருகே உள்ள டாஸ்மாஸ்க் கடையில் மது அருந்திய பெத்துகுமார் குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக பெத்துகுமார் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதேபோல், கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஜோதி மாணிக்கம் என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...