திருப்பூரில் வாங்கிய கல்விக் கடனுக்கு அதிக வட்டி கேட்கும் வங்கி நிர்வாகம்; இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: திருப்பூரில் வாங்கிய கல்விக் கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வங்கி நிர்வாகம வற்புறுத்துவதால் கடனை ரத்து செய்யக்கோரி இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் வாங்கிய கல்விக் கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வங்கி நிர்வாகம வற்புறுத்துவதால் கடனை ரத்து செய்யக்கோரி இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. 

திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பிரபா என்பவர் 2013 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 1155 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக வங்கியில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்து கல்லூரி படிப்பைத் துவங்கியுள்ளார். இந்நிலையில் கல்லூரி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கல்வி கடன் கிடைக்காத நிலையில் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி படித்துள்ளார்.

இரண்டு ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பின் மூன்றாம் ஆண்டு திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் ரூபாய் 2 லட்சத்து 69 ஆயிரம் கல்விக் கடன் வாங்கியுள்ளார். 

இந்நிலையில் கல்வி கடன் பெற்றது முதல் மாதந்தோறும் அதற்கான வட்டியை செலுத்தி வரும் சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பின்பு ஓர் ஆண்டு வேலை இல்லாமல் தற்போது சென்னையில் வேலைக்கு சேர்ந்துள்ள சூழ்நிலையில் தற்போது உடனடியாக 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கட்ட வேண்டும் என வங்கி வற்புறுத்தி வருவதாக குற்றம் சாடியுள்ளார். 



மேலும், தற்போது உள்ள சூழ்நிலையில் உடனடியாக தன்னால் பணத்தை கட்ட முடியாது எனவும் ஆனால் வங்கி நிர்வாகம் தொடர்ந்து நெருக்கி வருவதோடு, இப்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், அதனால் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...