திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தக்ஷின் கன்னடா மாவட்ட ஆட்சியராக இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த முன்னால் ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் NPR , NRC ஆகியவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள் எனவும், அவை பாசிசத்தின் கிரீடங்கள் என சாடினார்.
அவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தக்ஷின் கன்னடா மாவட்ட ஆட்சியராக இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த முன்னால் ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் NPR , NRC ஆகியவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள் எனவும், அவை பாசிசத்தின் கிரீடங்கள் என சாடினார்.
அவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.