வால்பாறையில் 300 க்கும் மேற்ப்பட்ட மலைவாழ் மக்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர். 

வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக கூறியும், குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு 2006 வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும்,உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



தொடர்ந்து கோவை நோக்கி நடை பயணத்தை துவக்கிய அவர்களை வால்பாறை டி.எஸ்பி விவேகானந்தன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் வராததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் பழங்குடியின மக்கள் கோவை நோக்கி நடைபயணத்தை துவக்கினர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 



இதனிடையே, வால்பாறை வணிகர் சங்கத்தினர் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரவித்தனர். பழங்குடியினர் கைதை கண்டித்து வால்பாறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...