கோவையில் நடைபெற்ற உலக மாணவர் தொழில்முனைவோர் விருது: புணே சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா தேர்வு

கோவை: கோவையில் நடைபெற்ற உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுக்கான இறுதிப்போட்டியில் புணேவை சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா இந்திய அளவிலான சிறந்த மாணவர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோவை: கோவையில் நடைபெற்ற உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுக்கான இறுதிப்போட்டியில் புணேவை சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா இந்திய அளவிலான சிறந்த மாணவர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார் 

தொழில் முனைவோர் அமைப்பு 61 நாடுகளில் 191 கிளைகளைக் கொண்டுள்ள உலகளாவிய அமைப்பாகும். கோவை தொழில் முனைவோர் அமைப்பு இந்த அமைப்பின் தெற்காசிய பிராந்திய மாநாடு மாறுபட்ட துறைகளைச் சார்ந்த 80 பேர் இதில் உறுப்பினர்கள் இந்த அமைப்பின் சார்பில் சிறந்த தேசிய மாணவர் தொழில் முனைவோருக்கான இறுதிப்போட்டி கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய போட்டிகளில் வெற்றி பெற்ற 25 பேரில் தேசிய அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்று தங்கள் தொழில் உத்திகள் வடிவமைப்பு முன்வைத்தனர். இதில் புணேவை சேர்ந்த மாணவி அக்ரிதி குப்தா இந்திய அளவிலான சிறந்த மாணவர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிபெற்ற மாணவி தென்னாப்பிரிக்க நாட்டில் கேப்டவுன் நகரில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மாணவர் தொழில்முனைவோர் போட்டியில் பங்கேற்க உள்ளார், 

முன்னதாக இந்தப் போட்டியில் கலந்து உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து தொழில் முனைவோராக உருவாக ஆர்வமும் துடிப்பும் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடன் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மாணவர்கள் போட்டிக்கான தலைவர் சிவ பாலகிருஷ்ணன், தெற்காசிய உறுப்பினர்களான இயக்குனர் ஜெயேந்திர ஜெயச்சந்திரன், கோவை கிளையின் தலைவர் ரஜினிகாந்த் தெற்காசிய நிபுணர்களான பியூஷ் பண்டாரி மற்றும் பிரதிக் கோயல், தொழில்முனைவோர் கோவை அமைப்பின் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் பரிமாற்ற பிரிவின் தலைவர் சூரஜ் சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வுகளில் செயல்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...