கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 16 செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 16 செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.
வால்பாறை பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதிய புதிய சட்டங்கள் மற்றும் புதிய அதிகாரகளின் கெடுபிடிகள் காரணமாக மலைவாழ் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்திருப்பதுடன் மேலும் அவர்களை வெளியேற்றும் முகமாக தொடர்ந்து வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக கூறியும், குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள காடர் இன மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் பழங்குடியின கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
அம்மனுக்களுக்கு, எவ்வித பயனும் இல்லாத நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையிலிருந்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு 120 கிலோ மீட்டர் நடைபயணத்தை நடத்தப்போவதாக பழங்குடியின மக்கள் அறிவித்திருந்தனர்.
மேலும், இது குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் நிர்வாகம் சார்பில் 15 தினங்கள் அவகாசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பழங்குடியினர் பல வருடங்களாக கோரிக்கை வைத்து ஏமாந்து வருகிறோம், ஆகவே திட்டமிட்டபடி நாளை 10ம் தேதி நடைபயண போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இப்பயணத்தில் 600க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் பாலமுருகன், வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன், மற்றும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின் மக்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதிய புதிய சட்டங்கள் மற்றும் புதிய அதிகாரகளின் கெடுபிடிகள் காரணமாக மலைவாழ் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்திருப்பதுடன் மேலும் அவர்களை வெளியேற்றும் முகமாக தொடர்ந்து வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக கூறியும், குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள காடர் இன மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் பழங்குடியின கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
அம்மனுக்களுக்கு, எவ்வித பயனும் இல்லாத நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையிலிருந்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு 120 கிலோ மீட்டர் நடைபயணத்தை நடத்தப்போவதாக பழங்குடியின மக்கள் அறிவித்திருந்தனர்.
மேலும், இது குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் நிர்வாகம் சார்பில் 15 தினங்கள் அவகாசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பழங்குடியினர் பல வருடங்களாக கோரிக்கை வைத்து ஏமாந்து வருகிறோம், ஆகவே திட்டமிட்டபடி நாளை 10ம் தேதி நடைபயண போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
இப்பயணத்தில் 600க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் பாலமுருகன், வால்பாறை வனச்சரகர் செந்தில்குமார், மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன், மற்றும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின் மக்கள் கலந்து கொண்டனர்.