கோவை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்கவே உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார் என்றும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்கவே உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார் என்றும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது என்றார்.
டி.என்.பி.எஸ்.சி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்த அரசு விரும்புவதாக கூறிய அவர், என்ன தவறு என்று காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர் எனவும் காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை என்றும் நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது என்றவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை எனவும் அவர் ஒரு பக்தி மான், அவர் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும் அது அதிமுகவின் கருத்து கிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும் எனவும் மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு என்றார்.
மேலும், இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை எனவும் இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.