கோவையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் கால் இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி!

கோவை: கோவை அவிநாசி சாலையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டு கால் இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



கோவை: கோவை அவிநாசி சாலையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டு கால் இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 

நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், இடதுகால் எலும்புகள் மற்றும் இரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ராஜேஸ்வரியின் இடதுகாலை அகற்றினர்.

இந்நிலையில், இன்று ஜல்லிக்கட்டு மற்றும் மண்டல அளவிலான வங்கியாளர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, விபத்தில் இடதுகாலை இழந்த ராஜேஸ்வரிக்கு சங்கனூர் கிராமத்திற்கான கிராம உதவியாளராக பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற ராஜேஸ்வரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...