கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஆத்துப்பாலம் முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சி.ஏ.ஏ., என்.பி.ஆர் சட்டங்களை கண்டித்தனர்.

மேலும், "ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களை குலைக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் உடனடியாக இது ரத்துசெய்யப்பட வேண்டும் என்று முழக்கமிட்டனர்.