திருப்பூர்: நீலகிரியில் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை செருப்பை கழற்ற கூறிய அமைச்சருக்கு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரியார் புத்தகங்களை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: நீலகிரியில் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை செருப்பை கழற்ற கூறிய அமைச்சருக்கு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரியார் புத்தகங்களை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி யானைகள் புத்துணர்வு முகாம் விழாவிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்ற கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரியார் எழுதிய சுயமரியாதை புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.
பெரியார் எழுதிய புத்தகங்களை படித்தாவது அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி புத்தகங்களை அனுப்புவதாகவும் சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா கூறினார்.

நீலகிரி யானைகள் புத்துணர்வு முகாம் விழாவிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்ற கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரியார் எழுதிய சுயமரியாதை புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.
பெரியார் எழுதிய புத்தகங்களை படித்தாவது அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி புத்தகங்களை அனுப்புவதாகவும் சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா கூறினார்.