மேட்டுப்பாளையம் அருகே தடைசெய்யபட்ட லாட்டரி மற்றும் கஞ்சாவை விற்பனை செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை காவல் நிலையத்திற்குட்பட்ட பல பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட லாட்டரி மற்றும் கஞ்சா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை காவல் நிலையத்திற்குட்பட்ட பல பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட லாட்டரி மற்றும் கஞ்சா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து காரமடை போலீசார் நகர மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்கானிப்பு பணியினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று காரமடையின் (மேற்கு) உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காரமடை போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரனை நடத்தினர். 

அப்போது அந்த பெண்ணின் கையில் இருந்த பையை சோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை நடத்தியதில், அவர் பூஜங்கனூரை சேர்ந்த பழனியம்மாள் என்பதும் இவர் அடிக்கடி கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல், காரமடை பில்லுக்கடை முக்கு சிறுமுகை சாலை பகுதிகளில் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த மகேஷ்குமார் என்பவரையும் காரமடை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேரள லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...