உதகை அருகே வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

நீலகிரி: உதகை அடுத்த காந்தள் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் தினேஷ் என்ற 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: உதகை அடுத்த காந்தள் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் தினேஷ் என்ற 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



உதகை அடுத்த காந்தள் புதுநகர் பகுதியில் மூன்று சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த வீட்டின் தடுப்புச் சுவர் மீது சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவர் இடிந்துள்ளது. இதில் 9 வயது தினேஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இரண்டு சிறுவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த உதகை புறநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் பலியான சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...