குன்னூரில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: சாலையில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் - 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

நீலகிரி: தேவேந்திர குல வேளாளர் ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த சிலர் பழனி செல்லும் அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கிய காரணத்தினால் குன்னூரில் 3 நேரமாக அரசு பேருந்து ஓட்டுனர்கள் சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

நீலகிரி: தேவேந்திர குல வேளாளர் ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த சிலர் பழனி செல்லும் அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கிய காரணத்தினால் குன்னூரில் 3 நேரமாக அரசு பேருந்து ஓட்டுனர்கள் சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் ஜான்பாண்டியன் குன்னூர் அருவங்காட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, குன்னூரில் இருந்து அருவங்காடு நோக்கி கட்சியினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பழனியில் இருந்து ஜான் பாண்டியன் கட்சியினருக்கு முன்பு சென்ற அரசுப்பேருந்து வழிவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினை சேர்ந்தவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது.



இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட இதர அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே தங்களது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குன்னூரில் 3 நேரமாக அரசு பேருந்து இயங்காமல் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.



பின்னர், பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்ளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, பேருந்து ஓட்டுநரை தாக்கி விட்டு மேட்டுப்பாளையம் சாலையில் தப்பி ஓட முயன்றவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...