திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்று வந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்று வந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று திருமணம் முடித்த முகமது பர்கர் மற்றும் சஹானா பாத்திமா தம்பதியினர் திருமண கோலத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்தத் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இன்று திருமணம் முடித்த முகமது பர்கர் மற்றும் சஹானா பாத்திமா தம்பதியினர் திருமண கோலத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.