மூளைச்சாவடை‌ந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்; கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உடல் உறுப்பு தானத்தை தீவிரமாக செயல்படுத்திய மருத்துவ குழுவினர்

கோவை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அவர்களது உறவினர்களின் அனுமதியுடன் தானமாக அளிக்கப்பட்டது.


கோவை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூளைச்சாவு அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அவர்களது உறவினர்களின் அனுமதியுடன் தானமாக அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த பழனியாண்டியின் மகன் சிவபெருமாள் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சிவபெருமாள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேல் மாடியில் நின்று வழக்கம் போல கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் சிவபெருமாள் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினர் சிவபெருமாளின் உடல் உறுப்புகள் வீணாக மண்ணுக்கு போவது பதிலாக யாருக்காவது பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அவரது உடலை தானம் செய்ய முன்வந்தனர்.



இதையடுத்து, முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. மேலும், சிறுநீரகம் சேலத்திலுள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக மருத்துவர்கள் உட்பட அனைவரின் முயற்சியால் அனுப்பப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...