கோவை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும்‌ பேரூராட்சி வளர்ச்சி‌ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்‌ ஆய்வு!

கோவை: கோவை மாவட்டம்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மற்றும்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி‌ திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மற்றும்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி‌ திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, தொண்டாமுத்தூர்‌ பேரூராட்சி பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை இன்று (05.02.2020) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வில்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஸ்குமார்‌, உதவி இயக்குநர்‌(பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, ஊரக வளர்ச்சி முகமையின்‌ செயற்பொறியாளர்‌ பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ சீனிவாசன்‌, சுதாகரன்‌, பேரூராட்சி செயல்‌ அலுவலர்‌ ரவிசங்கர்‌, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை மாவட்டத்தின்‌ நகர்புற கிராமப்புற மற்றும்‌ பேரூராட்சிப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித்‌ துறையின்‌ மூலம்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைத்தல்‌, சாலை வசதிகள்‌, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும்‌ அடிப்படை கட்டமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு செயல்படுத்தும்‌ வளர்ச்சித்திடப்பணிகள்‌ உரிய முறையில்‌ செயல்படுத்த, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களால்‌ கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌, இன்று பெரியநாயக்கன்பாளையம்‌ ஒன்றியம்‌, சோமையம்பாளையத்தில்‌ ரூ.51.98 லட்சம்‌ மதிப்பில்‌ புனரமைக்கப்பட்டு வரும்‌ மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடப்‌ பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ புனரமைக்கும்‌ பணியினை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, இம்மையத்தினை சுற்றியுள்ள பகுதிகளில்‌ உள்ள பயன்பாடற்ற பொருட்களை சுத்தம்‌ செய்யவும்‌, இம்மையத்திற்கு தேவையான பொருட்களை வழங்கிடவும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, தீத்திப்பாளையம்‌ ஊராட்சி, காளம்பாளையத்தில்‌ ரூ.2.90 கோடி மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ மேம்பாலப்‌ பணியினையும்‌, தொண்டாமுத்தூர்‌ பேரூராட்சியில்‌, கெம்பனூர்‌ குட்டை ரூ.50 லட்சம்‌ மதிப்பில்‌ புனரமைக்கும்‌ பணியினையும்‌, ஆலாந்துறை பேரூராட்சி, மூங்கில்‌ மடை குட்டை, ஆலமரத்து பள்ளம்‌, கொண்டதுகாளியம்மன்‌ கோயில்‌, வளையங்குட்டை, குறவன்‌ காட்டு பள்ளம்‌ ஆகிய பகுதிகளில்‌ ரூ.2.50 கோடி மதிப்பில்‌ சாலை தடுப்புச்சுவர்‌ அமைக்கும்‌ பணியினையும்‌, மத்வராயபுரம்‌ ஊராட்சி, தொம்பிலிபாளையம்‌ பகுதியில்‌ ரூ.3.20 கோடி மதிப்பில்‌ கட்டப்பட்டுவரும்‌ மேம்பாலப்‌ பணியினையும்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி, மத்வராயபுரத்தில்‌, முட்டத்துராயர்‌ கோயில்‌ அருகில்‌ ரூ.1.25 கோடி மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ மேம்பாலப்‌ பணியினையும்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

தொண்டாமுத்தூர்‌ பேரூராட்சி, காளியண்ணன்புதூரில்‌ உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில்‌ குழந்தைகளின்‌ வருகைப்பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும்‌ உணவு வகைகள்‌, ஆரோக்கியம்‌ குறித்தும்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆய்வு மேற்கொண்டார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...