திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்ப பெரும் வகையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மாநில அரசு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிடில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்ப பெரும் வகையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மாநில அரசு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிடில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.