கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும், வனவிலங்கு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும், வனவிலங்கு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் வந்து சேர்வதில்லை. எனவே நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களின் உருவப் படத்தை முகமூடியாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காட்டுயானைகள், காட்டுப்பன்றி, மயில்கள் போன்ற வனவிலங்குகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் நாசமடைந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தலைமடை பகுதியான மேட்டுப்பாளையம் விடுபட்டுள்ளதால் தமிழக முதல்வர் அறிவித்தபடி, அவிநாசி அத்திக்கடவு திட்டம் இரண்டை உடனடியாக அரசாணை பிறப்பித்து பணிகளை துவக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் வந்து சேர்வதில்லை. எனவே நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக விவசாயிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி அவர்களின் உருவப் படத்தை முகமூடியாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காட்டுயானைகள், காட்டுப்பன்றி, மயில்கள் போன்ற வனவிலங்குகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் நாசமடைந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தலைமடை பகுதியான மேட்டுப்பாளையம் விடுபட்டுள்ளதால் தமிழக முதல்வர் அறிவித்தபடி, அவிநாசி அத்திக்கடவு திட்டம் இரண்டை உடனடியாக அரசாணை பிறப்பித்து பணிகளை துவக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.