4 லட்சம் வாட்டர் பாட்டில்களில் இருந்து, 25000 டி-சர்ட்டுகள் தயாரித்து ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிக்கு அனுப்பிய திருப்பூர் பின்னாலாடை நிறுவனம்

திருப்பூர்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மருந்து பாட்டில்களில் இருந்து நூல் தயாரிக்கப்பட்டு, அதில் இருந்து ஆடை தயாரித்து அனுப்பி உள்ளனர். மறுசுழற்சி அடிப்படையில் தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்களில் இருந்து பாலீயெஸ்டர் நூல் தயாரித்து, அதில் இருந்து ஆடை உற்பத்தி செய்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு அனுப்பி உள்ளது திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம்.

திருப்பூர்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மருந்து பாட்டில்களில் இருந்து நூல் தயாரிக்கப்பட்டு, அதில் இருந்து ஆடை தயாரித்து அனுப்பி உள்ளனர். மறுசுழற்சி அடிப்படையில் தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்களில் இருந்து பாலீயெஸ்டர் நூல் தயாரித்து, அதில் இருந்து ஆடை உற்பத்தி செய்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு அனுப்பி உள்ளது திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம். 



ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது அவர்களின் பின்பக்கம் நின்று தவறவிடும் பந்தையும், மைதான எல்லையை விட்டு வெளியே செல்லும் பந்தையும் எடுத்து தருபவர்களை பால் கிட்ஸ் என்றழைப்பார்கள். 



இவர்கள் மைதானத்தின் எல்லா திசைகளிலும் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி தருபவர்கள், இவர்களது அலுவலர்கள் என அனைவருக்கும் திருப்பூரில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சீருடை தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை நிறுவனம்.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் இயங்கி வரும் என்.சி. ஜான் அன் சன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சத்யா கூறியபோது:



ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திவரும் டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஆடுகளத்தில் பால் கீட்ஸூகளுக்கான சீருடைகளை கேட்டிருந்தனர். அதன்படி வாட்டர் பாட்டில்களில் இருந்து நூல் எடுத்து மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தோம்.



வாட்டர் பாட்டில்களில் இருந்து பாலியெஸ்டர் நூல் எடுக்கும் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து, நூல் தயாரித்து அதனை துணியாக மாற்றினோம். இதற்கான 4 லட்சம் வாட்டர் பாட்டில்களில் இருந்து, 25000 டி-சர்ட்டுகள் தயாரித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாகவும் இது அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதேபோல் மற்ற நிறுவனங்களும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிக்க முன்வரும்போது சுகாதார மாசு ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...