கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரானா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத் துறை அலுவலாகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரானா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத் துறை அலுவலாகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோயம்புத்தூார் மாநகராட்சியில் கொரானா வைரஸ் தடூப்பு முன்னேற்பாடு பணிகளை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமும், பொது இடங்கள், பூங்கா, கல்லூரிகள், பள்ளிகளிலும் பொதுமக்கள் அதிகம் MHD இடங்களில் விழிப்புண்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள், வீதிகள், வீடுகள், அலுவலகங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும், விமானங்களின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளையும், உள்நாட்டு பயணிகளையும், விமானநிலைய மையத்துடன் இணைந்து பரிசோதனை ஆய்வு செய்யும் பணிகளையும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை 28 நாட்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட சுகாதார துறையுடன் மாநகராட்சி இணைந்து இப்பணிகளை கவனமுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொரானா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அனைவரும் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்டவர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ,.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் அவர்கள், மாநகராட்சி மருத்துவர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோயம்புத்தூார் மாநகராட்சியில் கொரானா வைரஸ் தடூப்பு முன்னேற்பாடு பணிகளை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமும், பொது இடங்கள், பூங்கா, கல்லூரிகள், பள்ளிகளிலும் பொதுமக்கள் அதிகம் MHD இடங்களில் விழிப்புண்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள், வீதிகள், வீடுகள், அலுவலகங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும், விமானங்களின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளையும், உள்நாட்டு பயணிகளையும், விமானநிலைய மையத்துடன் இணைந்து பரிசோதனை ஆய்வு செய்யும் பணிகளையும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களை 28 நாட்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட சுகாதார துறையுடன் மாநகராட்சி இணைந்து இப்பணிகளை கவனமுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொரானா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அனைவரும் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்டவர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ,.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் அவர்கள், மாநகராட்சி மருத்துவர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டார்கள்.