பொள்ளாச்சியில் கால்நடைகளை வேட்டையாடிய புலி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது..!

கோவை: பொள்ளாச்சியில் உள்ள சர்கார்பதி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி அங்குள்ள ஒரு தனியார் பண்ணையில் வனத்துறையினர் அமைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சியில் உள்ள சர்கார்பதி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி அங்குள்ள ஒரு தனியார் பண்ணையில் வனத்துறையினர் அமைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சியில் ஆயிரங்கால் குன்று என்ற வனத்திற்கு அருகேயுள்ள சர்கார்பதி கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த புலி ஒன்று, அங்கு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டி மற்றும் 5 ஆடுகளை வேட்டையாடியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்னர், தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய புலியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வனத்திலிருந்து தோட்டத்திற்கு வரும் இடத்தில் சுமார் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வனத்துறையினர் அமைத்த ஒரு கண்காணிப்பு கேமராவில் கால்நடைகளை வேட்டையாடுவதற்கு மீண்டும் வந்த புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இதனிடையே, கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை கூண்டு வைத்துப் பிடித்து குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...