பொள்ளாச்சியில் கால்நடைகளை வேட்டையாடிய புலி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது..!

கோவை: பொள்ளாச்சியில் உள்ள சர்கார்பதி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி அங்குள்ள ஒரு தனியார் பண்ணையில் வனத்துறையினர் அமைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சியில் உள்ள சர்கார்பதி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வரும் புலி அங்குள்ள ஒரு தனியார் பண்ணையில் வனத்துறையினர் அமைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சியில் ஆயிரங்கால் குன்று என்ற வனத்திற்கு அருகேயுள்ள சர்கார்பதி கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த புலி ஒன்று, அங்கு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டி மற்றும் 5 ஆடுகளை வேட்டையாடியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின்னர், தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிய புலியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வனத்திலிருந்து தோட்டத்திற்கு வரும் இடத்தில் சுமார் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வனத்துறையினர் அமைத்த ஒரு கண்காணிப்பு கேமராவில் கால்நடைகளை வேட்டையாடுவதற்கு மீண்டும் வந்த புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இதனிடையே, கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை கூண்டு வைத்துப் பிடித்து குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...