கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் பல ஏக்கர் மரங்கள், செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.
கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் பல ஏக்கர் மரங்கள், செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பாரளை தேயிலை தோட்டம். இந்த தேயிலை தோட்டத்தின் சோலையார் அணை சாலையை ஒட்டியுள்ள பாறைமேடு பகுதியில் தேயிலை தோட்டங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளன.

இந்நிலையில், விஷமிகள் சிலர் வைத்த தீயால் தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள சாலையிலிருந்து தீ பிடித்து மளமளவென பரவி வனப்பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் திடீர் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பசுந்தழைகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது.
இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான மரங்கள் செடி கொடிகள் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வலம் வருவதால் அவற்றை தடுக்க சிலர் தீ வைப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பாரளை தேயிலை தோட்டம். இந்த தேயிலை தோட்டத்தின் சோலையார் அணை சாலையை ஒட்டியுள்ள பாறைமேடு பகுதியில் தேயிலை தோட்டங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளன.

இந்நிலையில், விஷமிகள் சிலர் வைத்த தீயால் தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள சாலையிலிருந்து தீ பிடித்து மளமளவென பரவி வனப்பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் திடீர் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பசுந்தழைகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது.
இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான மரங்கள் செடி கொடிகள் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வலம் வருவதால் அவற்றை தடுக்க சிலர் தீ வைப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.