கோவை: மதுக்கரை காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.
கோவை: மதுக்கரை காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.
கோவை மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தூயமணி வெள்ளைச்சாமி. மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட்டத்தில் கேரளாவிலிருந்து வரும் லாட்டரிகள் அமோகமாக விற்கப்படுவதாகவும், எம் சேன்ட் மணல்கள் கடத்தப்படுவதாகவும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என கூறி திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும் புகார் கொடுப்பவர்கள் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தால், புகாரை ஏற்க காவல் ஆய்வாளர் மறுப்பதாக மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு காவல் ஆய்வாளர் உதவியாக இருப்பதாக கூறி கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தூயமணி வெள்ளைச்சாமி. மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட்டத்தில் கேரளாவிலிருந்து வரும் லாட்டரிகள் அமோகமாக விற்கப்படுவதாகவும், எம் சேன்ட் மணல்கள் கடத்தப்படுவதாகவும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என கூறி திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும் புகார் கொடுப்பவர்கள் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தால், புகாரை ஏற்க காவல் ஆய்வாளர் மறுப்பதாக மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு காவல் ஆய்வாளர் உதவியாக இருப்பதாக கூறி கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.