கோவை சூலூர் அருகே மாசு ஏற்படுத்தி வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் ஆலையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன் புதூரில் மாசு ஏற்படுத்தி வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் ஆலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவையை அடுத்த சூலூர் முத்துக்கவுண்டன் புதூரில் மாசு ஏற்படுத்தி வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் ஆலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கோவை சூலூர் அருகில் உள்ள முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் டெஸ்க்கோ பிளாஸ்ட் பேப்பர் கோன் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் கழிவால் நீர், காற்று போன்ற முக்கிய நிலைகள் மாசு ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை நுரையீரல் பாதிப்பு மூச்சுத்திணறல் போன்ற நோயால் பாதிப்படைந்து வருவதாகவும், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பேசுகையில், தொடர்ந்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் தங்களை அலைகழிப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...