பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

கோவை: பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி திமுகவினர் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி திமுகவினர் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ வாகனத்துடன் அண்ணாவின் பழமொழிகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணி காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இந்த அமைதி பேரணியில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளர்கள் எஸ்எம்.சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதேபோல், வால்பாறையில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அமமுக சார்பில் நகர கழகச் செயலாளர் நெல்லைச்செல்வன் தலைமையில் அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 



மேலும், வால்பாறை நகர அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...