திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றார். அலங்காநல்லூரில் கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் ராவணன் காளை மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 12 மாடுகளை பிடித்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றார். அலங்காநல்லூரில் கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் ராவணன் காளை மூன்றாம் பரிசை தட்டிச் சென்றது.
திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 784 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் 12 மாடுகளை அடக்கி முதல் பரிசான இருசக்கர வாகனத்தை வெற்றிபெற்றார். இரண்டாவது பரிசு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி 11 மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசை வென்றார்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரையின் காளை சிறந்த மாட்டிற்கான முதல் பரிசையும் அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புதுக்கோட்டை மாவட்டம் எஸ்ஐ அனுராதாவின் காளை மூன்றாம் பரிசையும் வெற்றி பெற்றது.
காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 72 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 784 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் 12 மாடுகளை அடக்கி முதல் பரிசான இருசக்கர வாகனத்தை வெற்றிபெற்றார். இரண்டாவது பரிசு மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி 11 மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசை வென்றார்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரையின் காளை சிறந்த மாட்டிற்கான முதல் பரிசையும் அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புதுக்கோட்டை மாவட்டம் எஸ்ஐ அனுராதாவின் காளை மூன்றாம் பரிசையும் வெற்றி பெற்றது.
காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 72 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.