குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவையில் பல்வேறு கட்சியினர் சார்பில் மாபெரும் பேரணி!

கோவை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் மாபெரும் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.


கோவை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் மாபெரும் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் இஸ்லாமியர்கள் மட்டுமே நடத்திக் கொண்டிருந்த போராட்டத்தை தற்போது அரசியல் கட்சியினரும் கையில் எடுத்துள்ளனர்.



இந்த நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான நேற்று கோவையில் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று உக்கடம் பகுதியில் இருந்து இந்த மாபெரும் பேரணி துவங்கியது.

இந்தப் பேரணியில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியில் "இந்தியா எங்கள் தாய்நாடு" என்றும் "சி ஏ ஏ,. என் ஆர் சி" போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியதுடன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்றனர்.

மேலும் இந்த பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் தன்னிச்சையாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர். 



மேலும் இந்த பேரணிக்காக கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...