நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நகர திமுக ஏற்பாட்டில் மாபெரும் கையெழுத்து இயக்கம் உதகை ஏ.டி.சி திடலில் இன்று, பிப்., 2 ஆம் தேதி நடைபெற்றது.
நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நகர திமுக ஏற்பாட்டில் மாபெரும் கையெழுத்து இயக்கம் உதகை ஏ.டி.சி திடலில் இன்று, பிப்., 2 ஆம் தேதி நடைபெற்றது.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டங்கள், பேரணிகள் கையெழுத்து இயக்கம் என தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, திமுக சார்பில் அதனுடைய தோழமைக் கட்சிகள் இன்று மாபெரும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தை நடத்தியது.
மேலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி இந்தப் போராட்டம் நடைபெற்றது, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் துவக்கப்பட்டது. இன்று துவங்கும் இந்த கையெழுத்து இயக்க போராட்டம் எட்டாம் தேதி வரை நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.