மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கு: 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த முடியாத நபர் சிறை தண்டனையை ஏற்றுக்கொண்ட பரிதாபம்

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட நபர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியாததால் நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட நபர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியாததால் நீதிமன்ற உத்தரவுப்படி சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (54). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதி குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்துள்ளார்.

இதையடுத்து சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

ஆனால், வழக்கிற்கு சாமிநாதன் ஒத்துழைப்பு வழங்காததால், நீதிமன்றம் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான சாமிநாதனுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் 2 வார சிறை தண்டனையும் விதித்து கோவை 8வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், ரூ.10,000 அபராதத்தை தன்னால் கட்ட முடியாது என்றும், 2 வார சிறையை ஏற்பதாக சாமிநாதன் தெரிவித்ததையடுத்து, கோவை மத்திய சிறையில் சாமிநாதன் அடைக்கப்பட்டார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் கட்ட முடியாததால் சிறை தண்டனையை ஏற்றுக் கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...