வால்பாறையில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா தேயிலை தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் ஓட்டுனர். இவருடைய மகன் வில்சன் (20) இவர் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி ஐ.டி படித்து வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா தேயிலை தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் ஓட்டுனர். இவருடைய மகன் வில்சன் (20) இவர் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி ஐ.டி படித்து வருகிறார். 

இன்று மாலை கல்லூரி முடிந்ததும் தனது உடன் படிக்கும் நண்பர் அஜீத் (21) என்பவருடன் தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கூழாங்கல் ஆறு அருகே திருப்பத்தில் வந்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 



இதன் காரனமாக இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் 108க்கு தகவல் தரவே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 



தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இச்சம்பவம் வால்பாறை கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...