திருப்பூர்: மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையினர் கோரிக்கை பெருமளவு நிறைவேற்றப்படவில்லை என்றாலும் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உள்ளதாக பட்ஜெட் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா.சண்முகம் தெரிவித்தார்.
திருப்பூர்: மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையினர் கோரிக்கை பெருமளவு நிறைவேற்றப்படவில்லை என்றாலும் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உள்ளதாக பட்ஜெட் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா.சண்முகம் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த இந்தியாவை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இருப்பதாகவும் , பின்னலாடை துறை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஜவுளித்துறைக்கென ரூ.1480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றார்.
மேலும், பின்னலாடை வாரியம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வரும் என காத்திருந்தோம் ஆனால், பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. அதேசமயம், சிறு குறு தொழில்களை பாதுகாக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் நிலுவையில் உள்ள EMBEDDED TAX எனப்படும் நிலுவை வரியினை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு பணப்பற்றாக்குறையை போக்க கூடிய பல அறிவிப்புகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளன என்று கூறினார்.