கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் துவங்கப்பட்ட வழக்கறிஞர் சங்க தேர்தலானது மாலை நான்கு முப்பது வரை நடைபெற்றது.
இந்தத் தேர்தலானது வாக்கு சீட்டு அடிப்படையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 2850 வழக்கறிஞர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் 2043 பேர் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்மொழி 922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருஞானசம்பந்தம் 814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கலையரசன் 659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன் 1293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற பொறுப்பாளர்களை சக வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் துவங்கப்பட்ட வழக்கறிஞர் சங்க தேர்தலானது மாலை நான்கு முப்பது வரை நடைபெற்றது.
இந்தத் தேர்தலானது வாக்கு சீட்டு அடிப்படையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 2850 வழக்கறிஞர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் 2043 பேர் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்மொழி 922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திருஞானசம்பந்தம் 814 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட கலையரசன் 659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன் 1293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற பொறுப்பாளர்களை சக வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.