வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

கோவை: வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதிகளில் பழங்குடியின மக்களான காடர், இருளர்,முதுவர், புலையர் என 16 செட்டில்மென்டுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை, மின்சாரம் போன்றவை கிடையாது. இதனால் மருத்துவ வசதிக்காக பல மணி நேரம், பல கிலோ மீட்டர் வனப்பகுதியை கடந்து மருத்துவ உதவியை பெற வேண்டியுள்ளது.



இதனை தவிர்க்கும் பொருட்டு வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் சுரேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர் கவர்க்கல் செட்டில்மென்ட் பகுதிக்கு சென்று முகாம் அமைத்து இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உட்பட பல்வேறு மருத்துவ சோதனைகளை மேற்கொண்டனர்.

மருத்துவ சோதனைக்குப்பின் மருந்து மாத்திரைகளை வழங்கினர். மருத்துவ முகாமில் தலைமை மருத்துவர் சுரேந்திரன், இயற்கை மருத்துவர் கார்த்திகேஷ், சித்த மருத்துவர் பாபு, மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் பழங்குடியினர் 13 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...