கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில்யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முகாம் நிறைவடைந்து யானைகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கபட்டன.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில்யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முகாம் நிறைவடைந்து யானைகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கபட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 28 கோவில் யானைகள் பங்கேற்றிருந்த நிலையில் முகாமில் யானைகள் புத்துணர்வு பெற ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு யானைகள் பராமரிக்கபட்டு வந்தன.

இந்த நிலையில் 48 நாட்கள், ஒரு மண்டலம் நிறைவுற்றதை தொடர்ந்து கடந்த ஒன்னரை மாதங்களாக பாசபினைப்புடன் பழகி வந்த யானைகள் இன்று சொந்த ஊர்களுக்கு செல்ல லாரிகளில் ஏற்றபட்டன.

யானைகளை வாகணங்களில் ஏற்ற முயன்ற போது சக யானைகளை விட்டு பிரிய மனம் இன்றி யானைகள் லாரியில் ஏற மறுத்து அடம் பிடித்தன, இதனையடுத்து கயிறுகளை கட்டி இழுத்தும் பாகண்கள் யானைகளை சமாதானப்படுத்தியும் லாரியில் ஏற்றினர்.
முன்னதாக, நிறைவு விழா நடத்தபட்டு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கரும்பு, ஆப்பிள், அண்ணாசி பழங்கள் கொடுக்கப்பட்டு முகாமினை அறநிலையத்துறை அதிகாரிகள் முடித்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு லாரியில் ஏற்றபட் யானைகளை சொந்த ஊர்களுக்கு கொடி அசைத்து அனுப்பிவைத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 28 கோவில் யானைகள் பங்கேற்றிருந்த நிலையில் முகாமில் யானைகள் புத்துணர்வு பெற ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு யானைகள் பராமரிக்கபட்டு வந்தன.

இந்த நிலையில் 48 நாட்கள், ஒரு மண்டலம் நிறைவுற்றதை தொடர்ந்து கடந்த ஒன்னரை மாதங்களாக பாசபினைப்புடன் பழகி வந்த யானைகள் இன்று சொந்த ஊர்களுக்கு செல்ல லாரிகளில் ஏற்றபட்டன.

யானைகளை வாகணங்களில் ஏற்ற முயன்ற போது சக யானைகளை விட்டு பிரிய மனம் இன்றி யானைகள் லாரியில் ஏற மறுத்து அடம் பிடித்தன, இதனையடுத்து கயிறுகளை கட்டி இழுத்தும் பாகண்கள் யானைகளை சமாதானப்படுத்தியும் லாரியில் ஏற்றினர்.
முன்னதாக, நிறைவு விழா நடத்தபட்டு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கரும்பு, ஆப்பிள், அண்ணாசி பழங்கள் கொடுக்கப்பட்டு முகாமினை அறநிலையத்துறை அதிகாரிகள் முடித்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு லாரியில் ஏற்றபட் யானைகளை சொந்த ஊர்களுக்கு கொடி அசைத்து அனுப்பிவைத்தனர்.