தென்னை நார் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு; தென்னை, வாழை பயிர்களுடன் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை: தென்னை நார் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அடுத்து பொள்ளாச்சி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தென்னை, வாழை பயிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தென்னை நார் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை அடுத்து பொள்ளாச்சி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தென்னை, வாழை பயிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தங்களது பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட மஞ்சி மில்கள் இயங்கி வருவதாகவும் இதில் இருந்து வரும் தூசிகள் பயிர்கள் மீது படிந்து விடுவதாக தெரிவித்தனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறிய அவர்கள், பனி காலங்களில் வெள்ளை ஈ,மற்றும் பூச்சிகள் பரவி பயிர்கள் சேதம் அடைவதாக தெரிவித்தனர்.

தென்னை நார் கழிவுகளால் அப்பகுதியில் தண்ணீர் மாசுபட்டு கால்நடைகள் தண்ணீர் குடிப்பதில்லை எனவும் அங்குள்ள குடிநீர் வாரிய மேல்நிலை தொட்டியிலும், மஞ்சி கழிவு துகள்கள் பரவி உள்ளதால் பொதுமக்களும் தண்ணீர் குடிக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், இப்பகுதியில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதாக கூறினர்.

மேலும், விவசாய நிலங்கள் அருகில் மஞ்சிகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றனர். விவசாயம் தேசத்தின் முதுகெலும்பு என கூறும் அரசுகள் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காதது வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...