கோவை: வால்பாறையில் பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பிரதேசமாகும். இங்கு பேருந்துகள் தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கிளையின் மூலம் 32 பேருந்துகள் பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், கோவை மற்றும் தேயிலை தோட்டுப்பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு, பராமரிப்பு மற்றும் சேவைக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் முதல் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு அதற்கான விழா வால்பாறை கிளையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம் வால்பாறை கிளை மேலாளரிடம் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், இந்த கிளையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர், பணிமனை பணியாளர்கள் அலுவலர்கள் உட்பட 240 பேருக்கு அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம், மண்டல மேலாளர் ஜோதி மணிகண்டன், வால்பாறை கிளை மேலாளர் சந்திரசேகரன், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பிரதேசமாகும். இங்கு பேருந்துகள் தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கிளையின் மூலம் 32 பேருந்துகள் பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், கோவை மற்றும் தேயிலை தோட்டுப்பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்குதல், எரிபொருள் சேமிப்பு, பராமரிப்பு மற்றும் சேவைக்காக தமிழ்நாடு அரசு கோவை கோட்டத்தில் கோவை மாவட்டத்தின் முதல் சிறந்த கிளையாக வால்பாறை கிளை தேர்வு செய்யப்பட்டு அதற்கான விழா வால்பாறை கிளையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம் வால்பாறை கிளை மேலாளரிடம் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், இந்த கிளையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர், பணிமனை பணியாளர்கள் அலுவலர்கள் உட்பட 240 பேருக்கு அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிர்வாக இயக்குநர் அன்பு ஆப்ரகாம், மண்டல மேலாளர் ஜோதி மணிகண்டன், வால்பாறை கிளை மேலாளர் சந்திரசேகரன், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.