48 நாட்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு..! பிரியாவிடை கொடுக்க தயாரான யானைகள்!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுக்கையில் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாமில் அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பழங்கள், கரும்புகள் கொடுத்து முகாமினை முடித்து வைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுக்கையில் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாமில் அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பழங்கள், கரும்புகள் கொடுத்து முகாமினை முடித்து வைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.



இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் என மொத்தம் 28 யானைகள் பங்கேற்றன. முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள், பசுந்தீவனங்கள், நடைப்பயிற்சி, மருத்துவ வசதி ஆற்றுநீரில் குளித்து மகிழ ஷவர்பாத் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 48 நாட்கள் ஒரு மண்டலம் நடைபெற்ற இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், யானைகள் பவானி ஆற்றின் ஷவரில் குளித்து அலங்கரிக்கப்பட்டு முகாமில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன, பின்னர் முகாம் வளாகத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் யானைகளுக்கு பழங்களை வழங்கி முகாமினை முடித்து வைத்தார். முகாமில் உள்ள யானைகளை அழைத்து செல்ல சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் சார்பில் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு யானைகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...