கோவை: வால்பாறை அருகே வனத்துறையினரை ஏமாற்றி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தேநீர் கடையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை: வால்பாறை அருகே வனத்துறையினரை ஏமாற்றி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தேநீர் கடையை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த பகுதியில் சிவகுமார் என்பவர் தேநீர் கடையுடன் மளிகை கடையை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. நேற்றைய முன்தினம் இப்பகுதியில் உள்ள நியாய விலை கடை மற்றும் சத்துணவு கூடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின.

தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் வனத்துறையினரால் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வாகனங்களுடன் காவலர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர். நள்ளிரவு அப்பகுதிக்குள் வந்த 3 காட்டு யானைகள் சிவகுமாரின் கடையை உடைத்து சூறையாடின. இதில் கடையில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி கடைக்குள் சிக்கிய சிவகுமாரை மீட்டனர்.

வனத்துறையினரின் முகாம் மற்றும் வனத்துறையினரின் தீவிர ரோந்து பணியின் போது காட்டு யானைகள் வனத்துறையினரை ஏமாற்றி கடையை உடைத்த சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இந்த பகுதியில் சிவகுமார் என்பவர் தேநீர் கடையுடன் மளிகை கடையை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. நேற்றைய முன்தினம் இப்பகுதியில் உள்ள நியாய விலை கடை மற்றும் சத்துணவு கூடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தின.

தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் வனத்துறையினரால் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வாகனங்களுடன் காவலர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர். நள்ளிரவு அப்பகுதிக்குள் வந்த 3 காட்டு யானைகள் சிவகுமாரின் கடையை உடைத்து சூறையாடின. இதில் கடையில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி கடைக்குள் சிக்கிய சிவகுமாரை மீட்டனர்.

வனத்துறையினரின் முகாம் மற்றும் வனத்துறையினரின் தீவிர ரோந்து பணியின் போது காட்டு யானைகள் வனத்துறையினரை ஏமாற்றி கடையை உடைத்த சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.