நீலகிரி: குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி: குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் என்ற மும்முனை தாக்குதலை வாபஸ் பெற வலியுறுத்தி குன்னுார் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த மனித சங்கிலியானது மவுண்ட் ரோடு, லாலி மருத்துவமனை, Y.M.C.A வழியாக ஹோட்டல் ப்ளூ ஹில்ஸ் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பெண்கள் உட்பட 500 மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டம் 1 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக கழக நிர்வாகிகள், விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, முஸ்லிம் லீக் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.