கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் வேலைகளை வழங்கக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கட்சியினர், இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து வ.ஊ.சி. மைதானம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இங்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது 5 கிலோ மீட்டர் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் வேலைகளை வழங்கக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கட்சியினர், இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து வ.ஊ.சி. மைதானம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து இங்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது 5 கிலோ மீட்டர் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.