திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி பவர் கிரிட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அரசு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இழப்பீடு இன்னும் சரியாக வழங்கப்படவில்லை எனவும் கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச இழப்பீடு போல திருப்பூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி பவர் கிரிட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அரசு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இழப்பீடு இன்னும் சரியாக வழங்கப்படவில்லை எனவும் கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச இழப்பீடு போல திருப்பூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.