வெள்ளலூரில் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கண்டனம்

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அவ்வளாகத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அவ்வளாகத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வளாகத்தில் 165 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நா.கார்த்திக், அவசரகதியில் மாநகராட்சி தேர்தலுக்காக பேருந்து நிலையத்திற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டியுள்ளார் என குற்றம்சாட்டினார்.

வெள்ளலூர் பகுதிக்கு மாநகர பகுதியில் இருந்து செல்ல போதிய சாலை வசதிகள் இல்லை எனவும் சாலைகள் செப்பனிடப்படாமல் இருப்பதாக கூறிய அவர், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். குப்பை கிடங்கு வளாகத்தில் பேருந்து நிலையம் அமைப்பதால் பொதுமக்களுக்குத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னர், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...