கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர் ஒருவர் தவறி விட்டுச் சென்ற ரூபாய்.3500 பணத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர் ஒருவர் தவறி விட்டுச் சென்ற ரூபாய்.3500 பணத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் உரியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கோவை ஆர்எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட சீரநாய்க்கன்பாளையத்தில் நேற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது, கோவில் வளாகத்தில் கீழே கிடந்த கைப்பையில் ரூ.3,500 ரொக்கம் இருந்துள்ளது. இதையடுத்து கைப்பையை எடுத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அதிலிருந்த முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரான கோகுல் குமார் மற்றும் அவரது மனைவி நந்தினியை வரவழைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த தம்பதியிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 3500 அளிக்கப்பட்டது. கீழே கிடந்த பணத்தை ஒரு மணிநேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கோவை ஆர்எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட சீரநாய்க்கன்பாளையத்தில் நேற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது, கோவில் வளாகத்தில் கீழே கிடந்த கைப்பையில் ரூ.3,500 ரொக்கம் இருந்துள்ளது. இதையடுத்து கைப்பையை எடுத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அதிலிருந்த முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரான கோகுல் குமார் மற்றும் அவரது மனைவி நந்தினியை வரவழைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த தம்பதியிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 3500 அளிக்கப்பட்டது. கீழே கிடந்த பணத்தை ஒரு மணிநேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.